பஞ்சாப் தலித்துகளின் பண்பாட்டுப் புரட்சி: ஆத் தர்ம இயக்கம் ஓர் அறிமுகம்

- அருண் பிரகாஷ் ராஜ்

க்கட்டுரை எழுதுவதற்குச் சில மாதங்கள் முன்பு, பஞ்சாபில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த குழப்பத்தின் காரணமாகத் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அமரிந்தர் சிங். அவருக்கு மாற்றாக முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கும் சரண்ஜித் சிங் சன்னி ஒரு தலித் சீக்கியர் என்பது அம்மாநிலத்தில் பெரும் விவாதமானது. மேலும், சீக்கிய மதத்திலும் சாதியம் ஊடுருவியிருக்கிறது எனும் தகவல் இந்நாட்டின் மற்ற பகுதிகளைச் சார்ந்தவர்களுக்கு இதன் மூலமாகவே சென்றடைந்திருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையினால் வெடித்த வன்முறை மற்றும் இடப்பெயர்ச்சி, காலிஸ்தான் விடுதலை இயக்கத்தின் செயல்பாடுகள், விளைவுகள் முதலிய மதம் சார்ந்த பிரச்சனைகள் பஞ்சாபில் மையம் கொண்டிருந்ததால் அங்கு சாதியின் இருப்பு மற்றும் இயங்கியல் குறித்து யோசிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கின்றன. சாதியம் குறித்தான கல்விப்புல ஆய்வுகளின் கவனம் ஒப்பீட்டளவில் இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் அதிகம் குவிந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.

எனினும், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தைக் காட்டிலும் தலித்துகளை அதிகமாகக்கொண்டிருக்கும் மாநிலமான பஞ்சாபில் (33%) தலித் இயக்கங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே மிகத் தீவிரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முதன்மையானது 1920-களில் தொடங்கப்பட்ட ‘ஆத் தர்ம இயக்கம்’. தலித்துகளே பஞ்சாபின் பூர்வகுடிகள், கடந்த காலத்தில் அவர்களுக்கென்று தனித்த வரலாறும் பண்பாடும் உண்டு. வெளியில் இருந்து வந்த இந்து மதத்தினால் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களானார்கள் முதலிய கருத்துகளைத் தலித்துகள் மத்தியில் கொண்டு சென்றது ஆத் தர்ம இயக்கம். வட இந்தியாவில் பக்தி இயக்கத்தை வளர்த்தெடுத்த ரவி தாஸை தங்களின் குருவாகக் கருதிய ஆத் தர்மிகள், 1931-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் வாயிலாக ஆத் தர்மத்தைத் தனித்ததொரு மதமாக அறிவித்துக்கொண்டார்கள். ஆத் தர்ம இயக்கத்தின் தோற்றம் குறித்தும் பஞ்சாப் சமூகத்தில் அவ்வியக்கம் செலுத்திய தாக்கம் குறித்தும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய முயல்கிறது இக்கட்டுரை.

பஞ்சாபில் சாதி அமைப்பு

1849-ஆம் ஆண்டு கிழங்கிந்தியக் கம்பெனியின் ஆளுகையின் கீழ் பஞ்சாப் வந்து சேர்ந்தது. இந்தியாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் சாதி அமைப்பானது பஞ்சாபில் வேறுவிதமாகச் செயல்படுவதை ஆங்கிலேய அதிகாரிகளும் மிஷினரிமார்களும் அறிந்துகொண்டனர். ஏனெனில், இந்தியாவின் மற்ற பிராந்தியங்களில் நிலவிவந்த பிராமணர்களின் ஆதிக்கம் பஞ்சாபில் கிடையாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பிராமணர்களில் பெரும்பான்மையினர் அங்கிருந்து கங்கைச் சமவெளிப் பகுதிக்குப் புலம் பெயர்ந்திருக்க, எஞ்சியிருப்பவர்களையும் ஏனைய சமூகத்தினர் இழிவாகக் கருதினர். விடியற்காலை ஒரு பிராமணரைப் பார்த்தால் அன்றைய தினம் ‘வௌங்காது’ எனும் பழமொழி பஞ்சாபியில் உண்டு. எனவே வேதங்கள், மனுதர்மம் போன்ற இந்து சமயப் புனித நூல்கள் பரிந்துரைக்கும் நால்வர்ணக் கோட்பாடு அங்கு புழக்கத்தில் இல்லை. இந்நிலைக்கு மூன்று முக்கியக் காரணங்களை அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!