மாட மாளிகைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன அதன் மந்திரக்கதவுகளை உடைத்துக்கொண்டு நீ உள் நுழைகிறாய் பிரமாண்டத்தில் மூச்சுத் திணறுகிறது வாசல்வழி தெரியாமல் மாளிகையின் உள்ளும் புறமுமாய் அலைமோதித் திரிகிறாய்...
வீட்டுத் தரையெங்கிலும் அப்பிய கடல் குருத்து மணல் துகள்களை உடலெங்கிலும் ஊடுருவிப் பாயும் அதிகாலையின் அதான் ஓசையை நிசப்தத்தில் கேட்கும் பறவைகளின் அதிகாலை கீச்சுக் கீச்சு இரகசியங்களை...