எல்லா அசிங்கங்களையும் புனிதமெனக் கருதும் ஒரு கவிஞன் இருந்தான் எல்லா அசிங்கங்களையும் புனிதமாக்கிவிடும் அந்த மந்திரச்செயல்தான் அசலான கவிஞனுக்குரியதெனப் போகுமிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான் நல்லவேளையாக அவனுடைய ஆதரவாளர்களுக்கு...
கடலோடிகள் கருவிழியில் வளர்ந்து தேயும் நிலவு பார்த்துப் பார்த்து வளர்ந்த காதல். செங்குத்தாய் உயர்ந்த மரம் வரையும் நிழல் கடிகாரத்தில் இருந்து பிறக்கிறது காத்திருப்பின் குகைச்சுவர் திறக்கும்...
‘உய் உய்’ ஒலியோடு அவசர ஊர்தி கடந்து செல்கிறது நீல, சிவப்பு விளக்குகள் மாறி மாறி எரிகின்றன சிறுமியாய் இருக்கும்போது சாவி கொடுத்தால் இதேபோல விளக்குகள் எரியும்...
பாடப்புத்தகத்தில் புதிர்ப்பாதையின் கீழிருக்கும் நாய்க் குட்டி அதன் வீட்டை மறந்துவிட்டதாகவும் அதற்கு வழிகாட்டுமாறும் ஆசிரியர் சொன்னார். அவன் நன்கு உற்றுப் பார்த்தான். நாய்க்குட்டி அவனைப் போலவே இருந்தது....
ஊர் திரும்புதல் ஆட்களில்லாத ஒழுங்கையில் நின்று யாரோடு கதைக்கிறாய்? யாருமில்லாத வீடொன்றின் கதவை ஏன் தட்டிக்கொண்டிருக்கிறாய்? கயிறு இழுத்துக் கட்டப்பட்ட படலைகளை உலுப்பித் தள்ளி களைத்துப் போனாய்....
மாட மாளிகைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன அதன் மந்திரக்கதவுகளை உடைத்துக்கொண்டு நீ உள் நுழைகிறாய் பிரமாண்டத்தில் மூச்சுத் திணறுகிறது வாசல்வழி தெரியாமல் மாளிகையின் உள்ளும் புறமுமாய் அலைமோதித் திரிகிறாய்...